தொலைத்தலும் இழத்தலும்
கவலையும் சந்தோசமும்
என் வாழ்வின் வழமையான ஒன்று
எல்லாம் இருந்தும்
கவலையும் சந்தோசமும்
என் வாழ்வின் வழமையான ஒன்று
எல்லாம் இருந்தும்
எதுவுமே இல்லாதவளாய்
வெறுமையாய் என்னையே நான் வெறுத்து
நின்ற வேளை விழிகளுக்கு ஒளி தந்து
இருளை அகற்றியவனும் நீ தான்
வெறுமையாய் என்னையே நான் வெறுத்து
நின்ற வேளை விழிகளுக்கு ஒளி தந்து
இருளை அகற்றியவனும் நீ தான்
தலை நிமிர்ந்து வாழு
உனக்காக நான் இருப்பேன்
என்றவனும் நீ தான்
அன்புக்கு இலக்கணம் சொன்னவனும்
நீயே அதனாலேயே என் பயணம்
தொடர்ந்து சென்றது உன் பின்னால்
உனக்காக நான் இருப்பேன்
என்றவனும் நீ தான்
அன்புக்கு இலக்கணம் சொன்னவனும்
நீயே அதனாலேயே என் பயணம்
தொடர்ந்து சென்றது உன் பின்னால்
உன்னை நம்பி நானிருந்தேன் ஆனால்
நீயோ ஒரு நொடிப் பொழுதில்
என்னை கலங்க வைத்தது ஏனோ?
ஓரக் கண்ணின் கசிவைத் தவிர
நீயோ ஒரு நொடிப் பொழுதில்
என்னை கலங்க வைத்தது ஏனோ?
ஓரக் கண்ணின் கசிவைத் தவிர
மெளனித்தவளாய் நானானேன் இன்று
வாழ்வில் எதுவும் நிரந்திரமல்ல என்று
அழகாய் பதிய வைத்து சென்றாய்
யாரோ ஒருவருக்காக என் அன்பை
அழகாய் பதிய வைத்து சென்றாய்
யாரோ ஒருவருக்காக என் அன்பை
எப்படி உன்னால் விலை பேச முடிந்தது
பூஜித்தபடி நான் இப்போ வெறித்த
மனதுடன் கால்கள் மட்டும்
தனியே நடை போடுகிறது
பூஜித்தபடி நான் இப்போ வெறித்த
மனதுடன் கால்கள் மட்டும்
தனியே நடை போடுகிறது
என்றும் என் வாழ்வின் உற்ற துணை
தனிமை மட்டும் தான் ....
தனிமை கொடுமையாக தான் இருக்கிறது
என் வாழ்வு நிரந்திரமற்றது
தனிமை மட்டும் தான் ....
தனிமை கொடுமையாக தான் இருக்கிறது
என் வாழ்வு நிரந்திரமற்றது
அதில் நீயும் நிரந்திரமற்றவன் - இருந்தும்
என் மனம் சொல்கிறது
முதலும் முடிவும் நீதான் என்று...
என் மனம் சொல்கிறது
முதலும் முடிவும் நீதான் என்று...